எங்கே இருந்தாலும்...

கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும்
அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்த பின்பு... எரேமியா 43:1


எரேமியா வெளிச்சத்தில் நடந்த தேவமனிதர். தேவனைவிட்டு விலகிப்போவதால் வரக்கூடிய தாக்கங்களைப்பற்றிப் பயமில்லாமல் இஸ்ரவேலுக்கு அறிவித்தவர். அதனால் அவர் பொய்யன் என்றும், தேவனால் அனுப்பப்படாதவர் என்றும் புறக்கணிக்கப்பட்டார். பாபிலோனுக்குப் பயந்து எகிப்துக்குப்போக வேண்டாம் என்றும், தாம் கூடவே இருப்பதாகவும் கர்த்தர் எரேமியா மூலம் எச்சரித்தும், பிரபுக்கள் மக்களைத் தவறான வழியிலே நடத்தினார்கள். அப்படியே சகல ஜனங்களும் எகிப்துக்குப்போக புறப்பட்டபோது, எரேமியாவையும் அழைத்துச் சென்றனர். வேறுவழியின்றி எரேமியாவும் சென்றார். ஆனால் அவர் உள்ளமோ தேவனோடு இருந்தது. ஆகவே அங்கேயும், பாபிலோன் எகிப்தை அழிக்கும் என்றும், ‘சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், பட்டயத்திற்கு ஏதுவானவன் பட்டயத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும் உள்ளாவான்’ என்றும் எரேமியா பயமின்றி எச்சரித்தார்.

தேவ எச்சரிப்பு இன்றும் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தும், சமுதாயத்தில் சில கீழ்ப்படியாத மக்களினால் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்குள்தான் தேவன் எரேமியாவை பாவித்தார். எரேமியாவும் பயமின்றி தேவனுடைய எச்சரிப்பைக் கூறுபவராக இருந்தார். எகிப்துக்குச் செல்ல நேர்ந்தபோதும், கர்த்தருக்காகத் தன்னுடைய வாயைத் திறக்க அவர் தயங்கவில்லை. நாம் வாழும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்றுதான். இன்று தேவனுடைய வார்த்தையை கேட்கவே மனதில்லாத, கேட்டும் கீழ்ப்படிய மனதில்லாத ஒரு கூட்ட மக்கள் மத்தியில் தான் நாம் வாழுகிறோம். தேவன் நம்மை அவர்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்.

அன்று எரேமியா சூழ்நிலையைக் கணக்கிடாமல் தேவனோடுள்ள தனது உறவைக் காத்துக்கொண்டது மாத்திரமல்ல, அவர்கள் அழிந்துபோகக்கூடாது என்ற ஆதங்கத்தால், தன்னுயிரையும் பாராமல் தேவசெய்தியைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதற்காக எரேமியா அழிந்துபோனாரா? இல்லையே! அப்படியானால் நாம் வாழுகின்ற இந்த சமுதாயத்தின் மத்தியிலே ஏன் நம்மால் தேவனுக்காக ஜீவிக்கமுடியாது? நம்மைச் சுற்றிலும் துன்பம், துக்கம், சண்டை, வன்செயல்கள், போர், பட்டினி, பஞ்சம், பழிவாங்கல், கொள்ளை நோய், இயற்கை அழிவுகள் என்று எத்தனை அழிவுகள்! இந்த அழிவில் அகப்படாமல் மக்களைக் காப்பாற்ற ஏன் நாம் வாயைத் திறக்கக் கூடாது? தேவனுடைய வசனத்தைக் கேட்டும் மக்கள் கீழ்ப்படியாமற் போகலாம். ஆனால் நாம் நமது பொறுப்பை நிறைவேற்றலாமே. வீணான வழிகளையும், வீணான மனிதரையும் விட்டுவிலகி, தேவனுடைய பாதையில் நடக்க முற்படுவோமா!

💫 இன்றைய சிந்தனைக்கு:

சூழ்நிலைகளுக்கு அப்பால் நின்று நம் தேவனைச் சேவிக்க நாம் ஆயத்தமா? இக் கடைசி காலத்தில் எனது பொறுப்பு என்ன?

ஒரு "வேலைக்காரனாய்"

ஒரு சாதாரண வேலைக்காரனாகவே இயேசு வந்தார்! எல்லா கிறிஸ்த்தவத் தலைவர்களுமே ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஒரு "வேலைக்காரனாய்" (ஊழியக்காரனாய்) இருப்பதன் அர்த்தம் என்ன? அந்த நடைமுறைக்கு ஒப்பிட்டே நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கிறிஸ்த்தவத் தலைவர்களே, உங்கள் சக ஊழியர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? உங்கள் குழுவோடு நேற்றுத்தான் சேர்ந்த ஒரு இளைய-ஊழியனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அந்த ஊழியன் மெய்யாகவே உங்களுக்கு ஒரு சகோதரனாய் இருக்கிறாரா? அல்லது அந்த சகோதரன் உங்களுக்கு அஞ்சி ஜீவிக்கிறாரா? காரியம் அப்படியாய் இருக்கும்போது, "ஊழியனின் தகுதி" குறித்து நீங்கள் காலமெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ அதைப்பற்றி சிறிதும் விளங்கிக் கொள்ளவில்லை என்றே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஆம், உங்கள் கண்கள் இன்னமும் இயேசுவைக் காணவில்லை!                                                                                                                                                                                                                         இயேசுவோ அத்தனை எளிமையாய் இருந்தார். அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு மேலாய்த் தன்னை உயர்த்தவேயில்லை! அவர் தம்மை "மனுஷ குமாரன்" என்றே கூறினார். அதற்கு அர்த்தம், "அவர் ஒரு சாதாரண மனிதர்" என்பதேயாகும். அவர் அத்தனை பரிசுத்தராய் தன் பிதாவோடு நித்தியகாலமும் "தேவகுமாரனாய் ஜீவித்தவர்! ஆனால் அவரோ, கீழே இறங்கி வந்து, இந்த பூமியில் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்! எல்லாவிதத்திலும் அவர் தன் சகோதரர்களுக்கு ஒப்பாய் மாறினார்!!  

                                                              எல்லாவிதத்திலும் நம் சகோதரர்களுக்கு ஒப்பாய் நாமும் மாறவேண்டுமென்றால், நம்மிலுள்ள "ஏதோ ஒன்று " சாகவேண்டும்! இயேசுவைப்பற்றி இவ்வாராகவே கூறப்பட்டுள்ளது, "அவர் தன்னைத்தானே மரணபரியந்தமும் தாழ்த்தினார்". இவ்வாறு நம்முடைய "சுயத்திற்கு மரிக்கும்போதுதான், நம்முடைய தாழ்மையை நாம் நிரூபித்திட முடியும்!   கோதுமைமணியானது நிலத்தில் விழுந்து "சாகும் போதுதான்" மிகுந்த கனிகளைத் தரமுடியும் என இயேசு கூறினார். இந்த சத்தியத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பாக, மெய்யான நடைமுறை கிறிஸ்த்தவ வாழ்க்கைகுப் போராடிய நேரத்தில் நான் கண்டுபிடித்தேன். நான் இந்தியாவில் ஆண்டவருக்காகச்செய்திடும் வலிமையான ஊழியம் "நிலத்தில் விழுந்து சாவதுதான்" என்பதை அப்போது நான் கண்டுகொண்டேன்! ஆம், என் சுய-சித்தத்திற்கு சாவு! ஜனங்கள் என்னைக்குறித்து என்ன எண்ணுகிறார்கள் என்ற அபிப்பிராயங்களுக்கு சாவு! என் சுய-இலட்சியங்களுக்கு சாவு!  சுயமாய் எண்ணிட்ட என் "இலக்குகளுக்கு" (Goals) சாவு! என் பண ஆசைக்கு சாவு இவ்வாறு ஒவ்வொன்றாய் தொகையிட்டு மொத்தத்தில் "என் சுயத்திற்கு" செத்திடும் வாழ்க்கையை நான் மேற்கொண்டேன்! இந்த வழ்க்கையை மேற்கொண்டபிறகு எனக்கு இயேசுவே எல்லாமுமாய் மாறினார்!! இப்போது நான் ஒவ்வொரு நாளும் இயேசுவை நோக்கிப்பார்த்து, சங்கீதக் காரனைப்போல நேர்மை கொண்ட நெஞ்சத்தோடு....... " பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு  வேறே விருப்பமில்லை!" (சங்கீதம் 73:25) என என்னால் கூறிட முடிகின்றது!!

                                               நான் படுக்கையில் படுத்திருக்கும் சமயங்களில் "ஆண்டவரே, என் ஊழியம் எனக்கு "தேவன்" அல்ல. நீர் ஒருவரே என் தேவன்! உமக்கு நான் தந்த ஸ்தானத்தை வேறு யாதொருவருக்கும் நான் தந்திடமாட்டேன். நீரே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறீர். என்னுடைய சத்தத்தை நீர் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் அல்லது என் சரீரத்திற்கு "வாதம்" வர நீர் அனுமதிக்கலாம் அல்லது நீர் விரும்பிய எதையும் எனக்கு நீர் செய்யலாம்! ஆகிலும், நானோ உம்மை என் முழு இருதயத்தாலும் தொடர்ந்து நேசிப்பேன்" என நான் தேவனைப் பார்த்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆம் நான் பெற்ற சந்தோஷத்தை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளவே முடியாது......    ஏனென்றால் தேவனுடைய சமூகத்தில் தான் "நித்திய பேரின்பம்" உள்ளதே! இந்த ஊற்றுக்கண்ணிலிருந்து மாத்திரமே, ஜீவநதிகள் நம்மூலமாய் புரண்டோடிடமுடியும்!!

Have faith - விசுவாசமாயிருங்கள்

For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God:  Not of works, lest any man should boast (Ephesians 2:8-9).

Throughout the epistles, there isn’t much teaching by the Apostles on the subject of faith. The Apostles never told us to have faith because they knew we were born with it. Someone might say, “Well, Jesus asked His disciples, on several occasions,
to have faith.” Understand that the disciples weren’t born again at that time; they lived under the Old Testament. Besides, salvation, which comes by grace
through faith hadn’t been consummated at the time Jesus taught the disciples to have faith. However, in Christ, faith has been imparted to our spirits.

In 2 Peter 1:1, the Apostle Peter wrote, “Simon Peter, a servant and an apostle of Jesus Christ, to them that have obtained like precious faith with us through the righteousness of God and our Saviour Jesus Christ.” Notice those to whom Apostle Peter was writing: “…them that have obtained like precious faith….” That’s talking about every believer in Christ. We’ve obtained like precious faith with the apostles; we’ve received it. We didn’t have to manufacture or create it; it came to us in the Word, the Gospel of Jesus Christ.

The Apostle Paul spelt out this same truth in his epistle to the Body of Christ in Romans 12:3. It reads, “For I say, through the grace given unto me, to every man that is among you, not to think of himself more highly than he ought to think; but to think soberly, according as God hath dealt to every man the measure
of faith.” This Scripture addresses all the saints in the Body of Christ; we that are born again! We were given the same measure of faith through the Gospel.

Now, the Lord Jesus made a profound statement with respect to what you can accomplish with that measure of faith. He said, “…verily I say unto you, If
ye have faith as a grain of mustard seed, ye shall say unto this mountain, Remove hence to yonder place; and it shall remove; and nothing shall be impossible

unto you” (Matthew 17:20). This is so inspiring; it means you can live a life of infinite possibilities, create your triumphant and victorious life, dominate, and rule your world through faith—the least amount of faith that you possess. This is awesome! Yet everyone has the responsibility to strengthen and multiply his faith.


கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர்  2:8-9)

விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களுக்கூடாக அநேக காரியங்களைப் போதித்துள்ளார்கள். ஒருபோதும் விசுவாசம் கொள் என்று அப்போஸ்தலர்கள் கூறவில்லை. காரணம் நாம் விசுவாசத்திற்குள்ளாகவே பிறந்திருக்கின்றோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சிலர் நல்லது, இயேசு தமது சீஷர்களிடத்தில் பல தடவைகள் விசுவாசமாயிருங்கள்என்று கூறியுள்ளாரே என்பர். அந்த நேரத்திலே அவருடைய சீஷர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் பிரமாணத்திற்கு அமையவே வாழ்ந்தார்கள். இரட்சிப்போ, அதற்கு அப்பால், கிருபையினாலும் விசுவாசத்தினாலும் வருகின்றது. அதனால்தான் இயேசு தமது சீஷர்களைப் பார்த்து விசுவாசமாயிருங்கள் என்று கூறி அதை நிறைவேற்ற செய்தார். எவ்வாறாயினும், கிறிஸ்துவுக்குள் விசுவாசமானது உங்கள் ஆவிக்குள் இப்போது ஊற்றப்பட்டுள்ளது.

2பேதுரு 1:1ல் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறதாவது, நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:கவனியுங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவே இதை எழுதுகின்றார். “...அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு...இது கிறிஸ்துவுக்குள் சகல விசுவாசிகளையும் குறித்து பேசுகின்றது. நாம் அப்போஸ்தலருடன் கூடவே விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அதை சுதந்தரித்துள்ளோம். அதை நாம் உருவாக்கவோ வடிவமைக்கவோ வேண்டியதில்லை. அது கிறிஸ்து இயேசுவின் சுவிசேஷமான வசனத்திற்கூடாகவே வருகின்றது.


அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் சாPரத்திற்கு நிருபங்ளை எழுதும்போது இந்த சத்தியங்களையே கூறுகின்றார். ரோமர் 12:3 ல் நாம் வாசிக்கிறோம். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.வசனம் கூறுகின்றபடி, கிறிஸ்துவின்சாPரமாயிருக்கின்ற சகல பரிசுத்தவான்களுடனும் நாமும் மறுபடி பிறந்தவர்களாக இருக்கின்றோம்! சுவிசேஷத்திற்கூடாக நாமும் அதேயளவு விசுவாசத்தைப் பெற்றுள்ளோம்.
இப்போது, கர்த்தராகிய இயேசு, விசுவாசத்தின் அளவைக் குறித்த ஒரு முக்கிய கூற்றினை கூறுகின்றார். அதனை நீங்களும் நிறைவேற்றலாம். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத்தேயு 17:20). இது ஆச்சரியமானது. உயிர்ப்பூட்டுகின்றது. அதாவது நீங்கள் முடிவற்ற வாய்ப்புக்களைக் கொண்ட வாழ்க்கையை வாழமுடியும். வெற்றியுள்ளதும் 
ஜெயமுள்ளதுமான உங்களுடைய வாழ்வை உருவாக்குங்கள். உங்கள் உலகத்தை விசுவாசத்தினால் ஆளுகை செய்யுங்கள். கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் ஜெயிப்பீர்கள். இது வியப்புக்குரியது! அவரது விசுவாசத்தினால் பெலனடைவதும் விருத்தியடைவதும் அனைவருக்குமான கடமையாகும்.

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை....


இந்த தேசங்களில் வாழும் விசுவாசிகள் பட்டியல் பிரகாரமாக தாங்கள் ஒடுக்கப்படும் உபத்திரவத்தை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காகவும், சமாதானதத்திற்காகவும், வழிவாட்டுதலுக்காகவும், ஞானத்திற்காகவும் ஜெபிப்போமாக.
1. வட கொரியா 2. ஈரான் 3. ஆப்கானிஸ்தான் 4. சௌதி அரபியா 5. சொமாலியா 6. மல்தீவிஸ் 7. யாமென் 8. ஈராக் 9. உஷ்பெக்கிஸ்தான் 10. லாவோஸ் 11. பாக்கிஸ்தான் 12. எரித்திரியா 13. மௌரித்தியானா 14. பட்டான் 15. துர்மெனிஸ்தான் 16. சீனா 17. காத்தார் 18. வியட்நாம் 19. எகிப்து 20. செஸ்னியா 21. கொமொரோஸ் 22. அல்ஜீரியா 23. வட நைஜீரியா 24. அஷர்பைஜான் 25. லிபியா 26. ஓமான் 27. பர்மா அ. மியன்மா 28. குவைத் 29. புருணை 30. துர்க்கி 31. மொரோக்கோ 32. இந்தியா 33. தஜிகிஸ்தான் 34. ஐக்கிய அரபு எமிரத்தஸ் 35. வட சூடான் 36. ஷான்ஷிபார் தீவு (தான்ஷானியா) 37. துனிசியா 38. சீரியா 39. த்ஜிபௌத்தி 40. ஜோர்தான் 41. கியுபா 42. பெலாருஸ் 43. எத்தியோப்பியா 44. பாலஸ்தீன வளாகம் 45. பாஹரெய்ன் 46. கிரிகைஸ்தான் 47. வங்காளதேசம் 48. இந்தோனீசியா 49. ஸ்ரீலங்கா / இலங்கை 50. மலேசியா மற்றும் ரஷ்யா
கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. ஜெபிப்போமாக.

இந்திய மதங்களும் கிறிஸ்தவமும்

இந்திய மதங்களும் கிறிஸ்தவமும்

ஏறக்குறைய கிறிஸ்துவுக்கு முன் 2500ஆம் ஆண்டளவில் ஜலப்பிரயத்தில் காப்பாற்றப்பட்ட நோவா குடும்பத்தினர் தேவனுடைய ஆசீர்வாதத்தின்படி இப்பூமியில் பலுகிப்பெருக ஆரம்பித்தனர். பின்பு 200 ஆண்டுகளுக்குள் நோவாவின் புத்திரருடைய ஆலோசனைப்படி பாபேல் கோபுரத்தை கட்ட ஆரம்பித்தனர். அங்கு இறைவனின் விருப்பப்படி பாஷைகள் பிறந்தன. இதனால் ஒரே குடும்பத்தினர் பூமயியின் நாலாபக்கமும் ஜாதி ஜாதியாக கோத்திரம் கோத்திரமாக குடும்பம் குடும்பமாக பிரிந்தனர். பாபேலுக்கு கிழக்கே, ஊர் என்னும் இடத்தில் சேமுடைய சந்ததியினர் குடீயிருப்பதையும், அங்கிருந்து ஆபிரகாம் தேவனால் விஷேச நோக்கத்திற்காக அழைக்கப்படுவதையும் நாம் காண்கின்றோம்.

இப்பிரதேசத்தையே வேதாகமம் மொசொப்பெத்தாமியா என்று அழைக்கின்றது. ( அப் 7:2) நாம் இதை சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கின்றோம். வடக்கே யூப்பிரட்டீஸ், டைகிறிஸ் நதி தொடக்கம் தென் கிழக்கே கங்கை நதிவரை மக்கள் பரவி வாழ்ந்தனர். பாபேலில் ஆரம்பித்த விக்கிரக இயற்கைவழிபாடுகள் உலகமெங்கும் பரவியதோடு இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. மொஹஞ்சதரோ, ஹரப்பா ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற புதைப்பொருள் ஆராட்சிகள் அக்கால மனிதனின் வாழ்க்கையை ஓரளவிற்கு புலப்படுத்துகின்றது. இங்கே கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுக8ளைத்தவிர வேறு இலக்கியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அங்கே காணப்பட்ட பொருள்ககளின்மேல் காணப்படும் எழுத்துக்கள் வாசிக்க முடியாததால் சமய நிலையை சரியாக அறிய முடியவில்லை. ஆனால் வேதாகமத்தில் ஜலரப்பிரளய பேழையில் இருந்து இறங்கிய நோவா, ஒரு பலிபீடம் கட்டி அதில் சுத்தமான மிருகங்களையும் சுத்தமான பறவைகளையும் பலியிட்டான் என்பதையும் (ஆதி 8:20) அதன்பின்பு ஏறக்குறை 350 அளவில் வாழ்ந்த ஆபிரகாம், பலிபீடம் கட்டி தேவனைத் தொழுதுகொண்டான் என்பதையும் (ஆதி 12:8) நாம் வாசிப்பதிலிருந்து..... அக்கால மக்கள் வேள்விப்பலியில் மிருகங்களையும் பறவைகளையும் ஒரே நேரத்தில் பலியிட்டு, இறைவனை வணங்கி வந்தனர் என்பதை அறிய முடிகின்றது.

இக்காலத்தில் இயற்கைக்கு பயந்த மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டு தங்களை அழித்துவிடாதபடி பல உபாய தந்திரங்களை தேடிக்கொண்டனர். பலர் மின்னல், காற்று, இடிமுழக்கம், நீர், மழை, நெரும்பு, ஆகியவற்றை பணிந்து வணங்க ஆரம்பித்தனர். இப்படியாக சுமேரிய சிந்து வெளி நாகரீகத்தில் வணங்கப்பட்ட இயற்கை தெய்வங்கள் ஏறக்குறைய முப்பத்து மூன்று ஆகும்.

விண்ணுக்குரிய தெய்வங்களாக வருணன், சூரியன், சவிதா ப+ஷன், ஆதித்தன், தியௌ, மித்திரன், விஷ்ணு, உனஷ ராத்திரி போன்ற தெய்வங்கள் கூறப்பட்டுள்ளன. மண்ணுக்குரிய தெய்வங்களாக பிருதுவி, அக்கினி, பிருகாஸ்பதி, சோமன் போன்றவையும் இடைவெளித் தெய்வங்களாக சிந்து, வியாட், சதுத்ரி, சரஸ்வதி போன்ற நதிகளும் இந்திரன், உருத்திரன், வாயு, பர்ஜன்யன், அப்பு எனப்படும் நீர்த் தெய்வங்களும் கூறப்பட்டுள்ளன.

சிந்துவெளியில் காணப்பட்ட தொல்பொருட்களை அடிப்படையாகக்கொண்டு இயற்கை வழிபாடும் உருவ வழிபாடும் நிலவியது எனலாம். ஆனால் மனித வாழ்வில் எக்காலத்திலும் பாலியல் பாவங்கள் நிலவியதை நாம் மறுக்க முடியாது. எகிப்தின் நாகரீக காலத்தில் சோதோம் கொமோரோவில் நிலவிய ஆகார திரட்சி செல்வம், நிர்விசாரம் இயயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் இதனால் இறைவன் அவர்களை அக்கினியால் அழித்தல் இவை யாவும் ஏற்பட முக்கிய காரணம் மனிதன் இறைவனை தேடாமல் துன்மார்க்கத்தில் ஜீவித்ததேயாகும். மேலும் சிந்துவேளி நாகரீகத்தில் கோவில் வழிபாடு இருக்கவில்லை. ஆனால் இலட்சிணை ஒன்றில் ஒருவன் கையில் வாளேந்தி நிற்பது போலவும் அவனுக்கு அடியில் ஒரு பெண் முழங்கால்படியிட்டு இருப்பதுபொலவும் உருவகம் காணப்படுவதால் அக்காலப்பகுதியில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது எனலாம். இறைவன் ஆபிரகாமிடம் நீ நேசிக்கிற மகனை பலிசெலுத்து என்று கூறியபோது அவன் மறுக்காமல் தன் மகனை மோரியாமலைக்கு அழைத்துச் சென்று பலிகொடுக்க முயன்றது அக்காலத்தில் நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்தது என்பதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. மேலும் சிந்துவெளி நாகரீகத்தில் கல்லின் மேல் எண்ணெய் ஊற்றி அபிஷேகிக்கும் பழக்கம் இருந்தது. யாக்கோபு ஆரானை நோக்கி ஓடும் வழியில் தேவதூதர்களை கனவில் கண்ட இடத்தில் ஒரு கல்லை நிறுத்தி எண்ணெய் ஊற்றி அபிஷேகித்ததை நாம் அறிவோம். இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் அவ்வழக்கத்தை லிங்க வழிபாடாக தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்தியாவின் மதங்களுக்கு முதல் நூல்களாக விளங்குபவை வேதங்களாகும். வேதம் என்ற சொல் வித் என்ற வினையடியாக பிறந்தவையாகும். வித் என்றால் அறிதல் அல்லது அறிவு எனப் பொருள்படும். எனவே வேதங்கள் அறிவு நூல்களாகும். இவை இறுக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வகைப்படும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது இறுக்கு வேதம் என்று கூறுகின்றனர். இறுக்கு கால மக்கள் பல்வேறு கடவுள்களை வழிபட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ப ஒரு கடவுளுக்கே முதன்மை கொடுப்பர். இந்திரனை வழிபடும்போது இந்திரனை பரம்பொருளாகவும் வருணனை வழிபடும்பொழுது வருணனை பரம்பொருளாகவும் கருதி வழிபடுவர். எச்சந்தர்ப்பத்தில் எக்கடவுளை வணங்குகின்றார்களோ அக்கடவுளையே உயர்ந்த கடவுளாக கருதி வழிபடும் இயல்புடையவர்கள். சந்தர்ப்பத்தைப் பொருத்து வணங்கும் கடவுளுக்கு முதன்மை கொடுப்பதால் சரியான ஒரு கடவுளை யார் என்று அறியாமல் சந்தர்ப்பவாதிகளாக பற்பல தெய்வங்களை வணங்கிப் போற்றுகின்றனர். இப்படியான ஒரு சூழ்நிலையிலேயே ஆபிரகாம் இருந்தான். தேவன் அவனோடும் அவன் சந்ததியாரோடும் இடைபட்டதால் அவர்கள் மெய்தேவ வணக்கத்தில் ஊறி திழைத்து வந்தனர்.
தற்காலத்தில் நாம் இந்தியாவிலுள்ள இந்துக்களை கண்ணோக்கிப் பார்க்கும்போது வட இந்தியாவிலுள்ளவர்கள் விஷ்ணுவை பரம்பொருளாகவும் தென் இந்தியாவிலுள்ளவர்கள் சிவனை பரம்பொருளாகவும் இன்னும் சிலர் விநாயகரை பரம்பொருளாகவும்கொண்டு அத் தெய்வங்களை வணங்குகின்றனர். தென் நாட்டில் இந்துக்களின் கடவுளாக கொள்ளப்படுபவர்கள் சிவன், சக்தி, விஷ்ணு, குமரன், விநாயகன், பிரமன், ஐயப்பன் ஆகிய ஏழுபேராவர். இவர்களில் பிரமனுக்கு தனிச் சமயம் இல்லை. மிகுதி குட்டித் தெய்வங்கள் அனைத்தும் ஆறு கடவுளுக்குள் அடங்கி விடும். இதனால் முறையே, சைவம், சாத்தம், வைணவம், கௌமாரம், காணபத்தியம், சௌரம், ஆகிய ஆறு மதங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்படியாக தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கமே இவ் ஆறுவகை சமயங்களாகும். மேலும் புராணங்களின்படி சிவனுக்கும் சக்திக்கும் பிறந்த பிள்ளைகளே குமரனும் விநாயகனும் ஆவார். அவ்வண்ணம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளே பிரமனும் ஐயப்பனும் ஆவார். எனவே இவை ஒரு குடும்பத்து தென்நாட்டு தெய்வங்கள் எனலாம். இவற்றையே சேர சோழ பாண்டிய நாட்டினரும் இலங்கையில் வாழ்ந்த மக்களும் வெளிநாடுகளுக்கு கடல்கடந்து சென்றோரும் பல நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர்.
இந்து என்ற சொல் ஒரு சமயத்தினரைக் குறிக்கும் சொல் என பலர் எண்ணுகின்றனர். எபிரெயர்களின் வேதமான தல்மூட்டில் அதாவது பழைய ஏற்பாட்டில் எஸ்தர் புத்தகத்தில் ஹொடு (HODUW) என்ற சொல் இந்தியாவையே அதாவது இந்தியாவில் வாழும் மக்களையே குறிக்க பயன்பட்டுள்ளது. (எஸ்தர் 1:1, 8:9). 'இந்து தேசம் முதல் எத்தியோப்பிய தேசம் வரைக்கும் உள்ள 127 நாடுகளை அரசாண்ட’ என்ற வசனத்தின் அடிப்படையில் இந்து என்பது ஒரு நாட்டின் பெயரே ஆகும். எனவே இந்துக்கள் என்பது இஸ்ரவேலரை தூரத்தில் நின்று பின்சென்ற அல்லது இஸ்ரவேலரோடு தூரத்தில் வளர்ந்த ஒரு நாட்டினரே ஆவர்.
இஸ்ரவேல் நாட்டில் எருசலேம் ஆலயத்தில் தூய தெய்வீக மணம் கமழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சில மைல் தூரத்தில் இருந்த சமாரியாவில் விக்கிரக கன்றுக்குட்டி வணக்கம் நாற்றமடித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந் நாற்றம் இந்தியாவில் சிந்துவெளி சுமேரிய நாகரீகம் தொடக்கம் இன்றைய விஞ்ஞான நாகரீகம் வரை தொடர்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

ஆரியர் இந்தியாவிற்குள் வந்தபோதுதான் வேதங்கள் நான்கும் இந்தியாவிற்குள் வந்ததாக நாம் கருதமுடியாது. இந்தியாவிற்குள் நுழையாத ஆரியர் இன்னும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடத்தில் இந்த நான்கு வேதங்களும் இல்லை. எனவே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர் உண்மையான ஐரோப்பியர் அல்ல. ஆசீரிய பாபிலேரானிய யூத இனங்களின் வாரிசுகளே இன்று வட இந்தியாவில் காணும் மக்கள் கூட்டமாகும். கிறிஸ்துவுக்கு முன் 725ல் அசீரியர் இஸ்ரவேலரை சிறைபிடித்துச் சென்றனர். கிறிஸ்துவுக்கு முன் 605ல் பாபிலோனியர் யAதாவை சிறைபிடித்துச் சென்றனர். எனவே அன்று சிதறிய யூத மக்களின் சமய வழிபாடுகளை மருவி இந்துக்களின் சமயமாக பரிணமித்தது. ஆதியில் கோவில் கட்டும் வழக்கம் இருக்கவில்லை. மோசேக்கூடாக தேவனால் கொடுக்கப்பட்ட ஆலய கட்டுமானமே இந்தியாவில் கோவில் வடிவம் பெற்றது. இதேவேளையில் இஸ்ரவேலரின் வேள்வி பலியை வெறுத்த சமண பௌத்த மதங்களும் ஒரு பக்கத்தில் வேர்விட்டு வளர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. உண்மையாக கிறிஸ்து சிலுவையில் தியாகப் பலியாக வேள்வியாக்கப் பட்டார். அவரின் வேள்வியினாலேயே நாம் இன்று மீட்கப்பட்டு அவரின் பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ளோம்.

இஸ்ரவேலரின் சமய கோட்பாடுகளே இந்திய மதங்களின் அடிப்படைத் தத்துவங்களாக இருக்கின்றன என்பதை கீழ்வரும் பட்டியல் உறுதிப்படுத்துகின்றது.
1. ஸ்தல மகிமை – ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கின்றார் (ஆதி 28:17).
2. ஸ்தல விருட்சம் - மரத்தின் கீழ் நாட்டினர் (யோசுவா 24:26-27)
3. மூர்த்தி மகிமை - இந்தக்கல்லே கோவில் (ஆதி 28:22).
4. அபிஷேகம் - எண்ணை வார்த்தல் (ஆதி 35:14)
5. வழிபாடு – பானபலி வார்த்தார் (ஆதி 35:14).
6. காணிக்கை – தசமபாகம் செலுத்துவதாக நேர்த்தி (ஆதி 28:22)
7. பலிபீடம் - பலிபீடத்தைக் கட்டினார் (ஆதி 35:7)
8. வாகனம் - கன்றுக்குட்டி (1ராஜா 12:29)

இப்படியாக சிந்துவெளி நாகரீகத்தில் நிலவிய கோட்பாடுகள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் இந்தியாவிற்குள் நுழைந்து இன்றுவரை படிப்படையாக வளர்ந்துள்ளதை நாம் காணலாம். இந்திய மாபெரும் எழுத்தாளர்களான வால்மீகியும் வியாசரும் இறைத்தத்துவங்களை விளக்க முற்படுகின்றனர். இராமாயணத்தை இயற்றிய வால்மீகி இராம பிராணை விஷ்ணுவாக காண்பிக்கின்றார். அதேவண்ணம் மகாபாரதத்தை இயற்றிய வியாசகரும் கண்ணபிரானை விஷ்ணுவாக காண்பிக்க முயற்சிக்கின்றார். வியாசர் பகவத் கீதையில் இறைவனை புருஷோத்மனாக காட்ட முற்படுகின்றார் (15:17). இறைவன் சுத்த சைத்தனியமாக நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் ப+லோகம் புவர்லோகம் சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவருடைய பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழு முதற் கடவுளாகிய பரா பிரம்மம். அவரே மூவுலகினைத் தாங்கி;க் கொண்டிருக்கின்றார் என்றும் கடவுடன் சங்கமிக்கும் நதி இறுதியில் ஆற்றின் தன்மை அகன்று கடல் நீராவதுபோல் அமிர்த சொருபமாகிய பரமாத்மாவுடன் ஆன்மா போய்க் கலந்து பரஞான சுடராக சத் சித் ஆனந்த சொருபத்தில் கலந்து முக்தி நிலை அடைவது இறை நிலை என்றும் ஜீவாத்மாக்கள் எல்லாம் ஈஸ்வரனில் அடங்கியிருக்கின்றார்கள் என்றும் நிர்க்குண நிர்விகாரமாயிருப்பவர் பரம்ம பிரம்மமாகிய புருஷோத்மன் என்றும் அவர் கண்ணப்பிரான் ஆகிய ஸ்ரீ மத் கிருஷ்ணரே என்றும் காட்ட முற்படுகின்றார். (15:18).

தசாவதாரம் என்று சொல்லப்படும் பத்து அவதாரங்களிலும் அவதாரப் புருஷராக விளங்கியவர் முழு முதற்கடவுளாகிய மகா விஷ்ணுவே என்று நிரூபிக்க இந்த சமயம் முற்படுகின்றது. ஆனால் அவதார கொள்கைகளில் வேதாகமம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளாத படியால் இச்செயற்பாடுகள் கிறிஸ்;தவ பார்வையில் பொய்யாகின்றது. 'ஒரேமுறை பிறப்பதும் ஒரேமுறையில் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்புக்காக தேவனுக்கு முன் நிற்பதும்" மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற படியால் (எபிரெயர் 9:27) இப்போதனைகள் பொய்யும் ஏமாற்றும் என்று புலனாகின்றது.

சிந்துவெளியில் தோன்றிய, பின்பு தென் நாட்டை நோக்கி நகர்ந்த தென் இந்தியர் தங்கள் சரித்திரத்தை எழுதிவைக்கவில்லை. ஆனாலும் தங்களைப் பெறுமையாகக் கூற.... கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் பிறந்த மூத்தக் குடி என்று தங்களைக் கூறிக்கொள்வார்கள். மேலும் 'ஆதியும் அந்தமுமில்லாத காலம்" என்றும் பொதுவாகக் கூறிக்கொள்வார்கள். வரலாறு இல்லாதபடியால் இப்படிச்சொல்லி சமாளிக்கலாம். ஆனால் வேதாகமத்தில் வரலாறு மிகச் சரியாக இருக்கின்ற படியால் இவர்களின் கூற்றுக்கள் அனைத்தும் படுபொய் என்று எம்மால் (புரிந்துகொள்ள முடியும்) உறுதியாகக் கூறமுடியும்.

உயிர்கள் அனைத்தும் மறுபடியும் மறுபடியும் பிறந்தே முக்தி நிலை அடைவதாக இந்திய மதங்கள் கூறுகின்றன. அதாவது நிலத்தில் வளரும் புல் தொடக்கம் பிரம்மாவரை மறுபடியும் மறுபடியும் பிறக்கவேண்டுமாம். ஏனென்றால் பாவமாகிய முக்குணங்கள் எல்லா உயிர்களிலும் இருப்பதால் அவற்றை முற்றும் முழுதாக களைந்துவிட இப்பிறப்பு அவசியமாம். இப்படியாக படிப்படியாக உயர்பதவி என்றுச் சொல்லப்படுகின்ற 'பிகிருதிலயம்" இருக்கின்றதாம். 'சத்வம், ரஜாம், தாமசம்" ஆகிய இக்குணங்கள் அகல பல பிறப்பும், கோடிக்கணக்கான வருடங்களும் தேவை என்று இந்துக்கள் நம்புகின்றனர். ஆனால் கிறிஸ்தவத்திலோ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் கழுவும் என்றும் அப்படிப்பட்ட மனிதன் ஒருசில வருடங்களில் வசனத்தில் தேறி கனிகொடுத்து தெய்வீக சாயலை அடைவான் என்றும் வேதாகமம் கூறுகின்றது. தேவனைப்போல அகாப்பே அன்பில் வளர ஒரு சில வருடங்கள் போதுமானால் கோடிக்கணக்கான வருடங்களாகிய வியாசரின் கருத்து படு பிழையானதாகும்.

இந்திய மதங்கள் இன்று படிப்படியாக வளர்ந்தவண்ணம் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன் குமரக் கடவுள் சின்ன தெய்வமாகவே கருதப்பட்டார். இதனால் அருணகிரி நாதர் அறுமுகம் சிறுவன் என்ற எண்ணத்தை நீக்க குமரக் கடவுளும் அரி, அரண் ஆகியோருக்கு ஈடானவனே என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடெங்கும் முருகன் கோவிலைக் கட்ட முற்பட்டார். இவருடைய திருப்புகழ் பாடல்களால் ஆலயங்கள் சிறப்புப் பெற்றனவாம். திருப்புகழ் பா வகையை புதிய முறையில் அமைத்துக் காட்டியவர் அருணகிரி நாதரே. அதேபோல் 185 ஆண்டுகளுக்கு முன் உடுவில் கிறிஸ்தவ விடுதி பாடசாலையில் தங்கிப் படித்த ஆறுமுகம் பின்பு கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு எதிராக இந்துப் பாடசாலைகளை அமைத்தும் கிறிஸ்தவ ஞான உபதேசத்தைப் போன்று சைவ வினாவிடையை எழுதியும் கிறிஸ்தவ முறையில் பிரசங்கம் பண்ணியும் புராணங்களை அச்சிட்டும் சைவ வளர்த்ததை நாம் அறிவோம். ஆங்கிலேயர் காலத்தில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் உணவிற்காகவும் மதமாறிய மக்கள் இந்தியா இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் மீண்டும் தங்கள் பழைய மதங்களுக்கே திரும்பினர். இவர்களே இன்று நாம் காணும் இந்துக்கள்.

இப்படியாக இந்து மதம் இன்றுவரை வளர்ந்துகொண்டே வந்துள்ளன. சின்ன தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக மாறுகின்றன. ஆனால் கிறிஸ்தவ வேதாகமத்தைக் காணும்போது முழு உலக வரலாறும் ஏறக்குறை 1500 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தில் எழுதப்பட்டு பூர்த்தியடைந்து விட்டது. கிறிஸ்துவின் காலத்திலேயே கிறிஸ்தவம் பூரணமடைந்தது. இன்று கிறிஸ்தவ கோட்பாடுகள் வளராமல் கடந்த 1950 வருடங்களாக சபை வளர்ந்துகொண்டுவருகின்றது. எனவே இறைவன் 1950 ஆண்டுகளாக நேரடியாகத் தோன்றாமலேயே ஆவியானவருக்கூடாகவும் பரிசுத்த சீஷர்களுக்கு ஊடாகவும்வளரச் செய்ததன் மூலம் அது ஜீவாம்சம் உள்ள மார்க்கம் என்பதை எமக்கு உணரச் செய்கின்றது.
இந்து மதத்தில் இறைவன் புருஷோத்மனாக ஒளிமயமாக துலங்குவதாகக் கூறினாலும் அதன் இறுதி நிலை மகாவிஷ்ணுவின் வடிவமாக இருப்பதால் அவ்வொளிக்குள் மகா விஷ்ணுவின் கருமை நிறம் காணப்படுகின்றது. வேதாகமத்திலோ தேவன் ஒளியாக இருக்கின்றார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. (1யோவான் 1:9) என்றும் நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கின்றேன் என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் (யோவான் 8:12, 9:5) என்றும் அவரில் ஒளிமயம் பல சந்தர்ப்பங்களில் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிமயத்தில் இருள், கருமை சிறிதளவேனும் காணப்படாதது கிறிஸ்தவத்தில் இருக்கும் மேன்மையும் மகத்துவமுமாகும்.

பொதுவாகக் கூறப்போனால், இந்திய மதங்கள் பலதெய்வங்களை வணங்கும் பொலித்திச கொள்கையைப் பின்பற்றும் மதமாகவும் இயற்கையின் எல்லாவற்றையும் வணங்கும் பன்திச கொள்கையுள்ள மதமாகவும் அளவற்ற பரம்பொருளை மனித அறிவால் அறியாமல் அதனுடன் கலக்கும் நொக்ஸடிச கொள்கையைப் பின்பற்றும் மதமாகவும் இருப்பதைக் காணலாம். இக்கொள்கைகள் அனைத்தும் இறைவனை இயற்கையோடு இணைத்துக்காட்டி தாறுமாறு ஆக்கி இயற்கைக்கு ஒத்த வடிவிலேயே இறைவன் இருக்கின்றான் என்ற வரைவிலக்கணம் வகுத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. ஒரு செயற்கைப் பொருளை நாம் சுட்டிக்காட்டி அதை உண்டாக்கிய சிருஷ்டிகனின் வடிவத்தை ஒருபோதும் அறிய முடியாது. உதாரணமாக, விஞ்ஞானியாகிய எடிசன் கண்டுபிடித்த மின்சாரக் குழிழை வைத்துக்கொண்டு எடிசனும் இப்படித்தான் இருப்பார் என்று கூறமுடியுமா. முடியாது. அதேபோல் இயற்கையையும் அதன் தொழிற்பாட்டையும் வைத்துக்கொண்டு அதன் சிருஷ்டிகரை வர்ணிக்க முடியாது. இறைவன் இவ்வண்ணம் தான் இருப்பார் என்பது பயங்கரமான படு முட்டாள்தனமாகும்.

உலகில் வாழும் பறவை இனங்களைப் பார்க்கும்போது சில பறவைகள் ஒரு துணையுடனே வாழ்ந்து மடிந்துபோகின்றன. ஐந்தறிவு படைத்த இயற்கை இனங்களே இப்படித் தங்கள் கற்பைப் பாதுகாக்கும்போது இந்து மதத்தில் இறைவன் எனப் போற்றப்படும் தெய்வங்கள் திருமணம் செய்தும் போதாக்குறைக்கு இருமனைவிகளை வைத்துக்கொண்டும் சுவாமிகளாக வலம்வருவது உண்மையிலேயே இவைகள் தெய்வங்கள் அல்ல. அவை நம்மைப்போல் பூமியில் வாழ்ந்த பாவ மனிதர்கள் என்பதையே எமக்கு அறியத் தருகின்றன. எனவே மானிட தெய்வங்கள் உண்மையிலேயே தெய்வங்கள் ஆகா.

நாம் உண்மையான தெய்வத்தைக் காண குறிப்பிடத்தக்க இலட்சணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

முதலாவதாக இவ்வுலகையும் அண்ட சராசரங்களையும் சிருஷ்டிக்கும் சர்வ வல்லமை காணப்படுகின்றதா? கிறிஸ்தவத்திலோ ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் (ஆதி 1:1) தண்ணீரை தமது கைப்பிடியால் அளந்து வானங்களை சாண் அளவாய் பிரமாணித்து பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி பர்வதங்களை துலாக்கோலாவும் மலைகளை தராசாலும் நிறுத்தவர் யார்? என்றும் (ஏசாயா 40:12) நட்சத்திரங்களை இலக்கத் திட்டமாய் புறப்படப் பண்ணி அவைகளை பேர்பேராய் அழைக்கிறவர் என்றும் (ஏசாயா 40:26) எமது தேவனைக் குறித்துக் கூறப்படுகின்றது. ஆனால் இந்து மார்க்கத்தில் இப்படியான தெளிவான சம்பவங்கள் எதுவுமே இல்லாதபடியால் அங்கே சர்வ வல்லமை காணமுடியவில்லை. எனவே அம் மார்க்கத்தை வல்லமை நிறைந்ததாக கணிப்பிட முடியாது.

இரண்டாவதாக, சர்வவியாபகம் காணப்பட வேண்டும். பூமி முழுவதும் நிறைந்து நிற்கும் நிலை. நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே நிற்கின்றீர். நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர் (சங் 139:8) இந்த தராதரம் இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவிற்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் மாத்திரமே காணப்படுகின்றது. வேறு எந்த தெய்வங்களிலும் இந்த தாராதரம் காணப்படவில்லை.

மூன்றாவதாக, சர்வ ஞானம் காணப்பட வேண்டும். பூமியிலுள்ள பொருட்கள் முழுவதையும் அவர் உண்டாக்கினார் (சங் 104:24) பூமியையும் வானத்தையும் அவர் உண்டாக்கினார் (எரே 10:12-13). அரசியலில் அவருடைய செயல்பாடு காணப்படுகின்றது. (தானியேல் 2:20-21, 2:44) 2500 ஆண்டுகளுக்குட்பட்ட உலகின் முழு அரசியலையும் கனவில் ஒரு சிலை வடிவத்திற்குள் வெளிப்படுத்தக் கூடிய ஞானமுள்ளவர் (தானியேல் 2:44) கிறிஸ்துவுக்கு ஞானம் அறிவு ஆகிய பொக்கிஷங்கள் அடங்கியிருக்க காணப்படுகின்றது. (கொலோ 2:2). இப்படி சர்வ ஞானமுள்ள எவரையும் நாம் எங்கும் காணமுடியாது. வேதாகமத்தில் மாத்திரமே அவர் காணப்படுகிறார்.
நான்காவதாக, நித்திய காலமாக நிலைத்திருக்கும் நித்திய இலட்சணம் காணப்பட வேண்டும். தேவன் ஒருவர் மாத்திரமே ஆதிக்காலம் தொடக்கம் இன்றுவரை கிரியை செய்கின்றவராக காணப்படுகின்றார். அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் முந்தினவரும் பிந்தினவரும் மரணமடைந்தாலும் உயிர்த்தெழும்பும் வல்லமையுள்ளவராகவும் காணப்படும் தேவன் கிறிஸ்தவத்திலே காணப்படுகின்றார். இப்படியாக தெய்வீக இலட்சணங்களை வர்ணித்துக் கொண்டே போகலாம். பரிசுத்தம், சுதந்திரம், உண்மைத்துவம், நேசம், இரக்கம், உருக்கம், நீதி, நியாயம், நேர்மை இவை அனைத்தும் இந்திய தெய்வங்களில் எம்மால் காணமுடியாது. கிறிஸ்தவத்தில் மாத்திரமே இவற்றை பரிபூரணமாக காணமுடியும். எனவே கிறிஸ்தவமே மெய்யான மார்க்கமாகின்றது.

இந்திய மதங்களிலே தெய்வங்களின் பெயர்களை மனிதர்களே வைத்தனர். வேதாகமத்திலோ இறைவனே தமது பெயரை எமக்குக் கூறுகின்றார். ஆரம்பத்தில் ஏலோகீம் என்ற பன்மை தொகை பெயரில் வெளிப்படுத்துகின்றார். ஆதியிலே ஏலோகீம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1) என்று தமது பெயருக்கூடாகவே தம்மை வெளிப்படுத்துகின்றார். பின்பு மனிதனை சிருஷ்டிக்கும் வேளையில் ஏலோகீமாகிய யேகோவா என்று தம்மைக் காண்பிக்க முற்பட்டு தேவனாகிய கர்த்தராக எமக்கு ஜீவ சுவாசத்தை ஊதி ஜீவாத்மாவாக எம்மை நிலைநிறுத்தினார். ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்று தவறு செய்த போதிலும் அவர் அவர்களை தேடிவந்து அவர்களை இரட்சிக்க அவரது ஒரேபேறான குமாரனை அனுப்ப முற்பட்டு ஸ்திரீயின் வித்தை வாக்குப் பண்ணுகின்றார். உண்மையிலேயே யேகோவா என்றால் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுள்ள தேவன் என்றும் ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர் என்றும் அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர் என்றும் பொருளாகும். (யாத்திராகமம் 34:5-7). கெம்பீர சத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள். யேகோவாவே அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள். அவர்கள் உம்முடைய பேரிலே நாடோறும் களிகூர்ந்து உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். (சங்கீதம் 89:15-16) என்றும் அவருடைய பெயருக்கூடாகவே அவருடைய குணாதிசய தன்மையை எமக்கு வெளிப்படுத்துகின்றார்.
அடுத்து வானத்தையும் ப+மியையும் சொந்தமாகக் கொண்ட உன்னதமான தேவனாகிய கர்த்தர் என்ற பெயரோடு தம்மை வெளிப்படுத்துகின்றார். எல்யோன் என்பது என்றென்றும் ஜீவித்திருக்கின்ற தமது விருப்பப்படியே வானத்தின் சேனைகளையும் பூமியின் குடிகளையும் நடத்துகின்ற அதி உன்னதமானவரைக் குறிக்கின்றது. இவருக்கு விரோதமாகத்தான் அந்திக் கிறிஸ்து இறுதியில் எழும்புவான். ஆனால் மூன்றரை வருட இறுதியில் அவன் தோற்கடிக்கப்பட்டு சகல ராஜ்யங்களும் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய நித்திய ராஜ்யத்தில் சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து கீழ்ப்பட்டிருக்கும். (ஆதி 14:23, தானியேல் 7:27-28) இப்படியாக அவருடைய அதி உயர் தராதரம் விளங்குகின்றது. 


அடுத்து தேவன் ஆதியாகமத்தில் யேகோவாயீரேயாக காட்சிக் கொடுத்து ஆபிரகாமுக்குத் தேவையான பலிபொருளைச் சந்திக்கின்றார். ஏற்ற நேரத்தில் கர்த்தருடைய பர்வத்தத்தில் பார்த்துக்கொள்ளப்படும் (ஆதி 22:14) அல்லது ஈவாக அருளப்படும் என்பதே அவர் பெயர் நமக்கு விளக்குகின்றது,

இறுதியாக இயேசு என்னும் பெயரை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். தெயோஸ், லோகோஸாக திகழ்ந்த வார்த்தையை எமக்குக் கொடுத்தார். அவர் சிலுவையில் பாவத்தைப் போக்கும் பலியாக மரணமடைந்து எம்மை இரட்சிக்க (மத் 1:21) தமது இரத்தத்தை சிந்தினார். இப்படி தேவன் பல பெயர்களுக்கூடாக தம்மை வெளிப்படுத்தி இறுதியில் அவர் தாமே மனுகுலத்திற்குரிய முக்தி வழியை ஏற்படுத்தி இருக்கின்றார். அவருக்கூடாக நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்படுகின்றோம். இந்திய மார்க்கங்களின் ஊடாக அல்ல. கிறிஸ்தவத்திற்கூடாகவே இரட்சிப்பு இருக்கின்றது என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்து அந்த இரட்சிப்பை ஏற்படுத்திய தேவாதி தேவனை நாம் மெய்யாகவே வாயார வாழ்த்திப் புகழலாம்.

நன்றி :இ. வஷ்னீ. 

துர்உபதேசங்களின் தன்மைகள்

தேவசத்தியத்தை தலைகீழாக மாற்றும் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.  அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மற்ற உலக நாடுகளிலிருந்தும் வேகமாய் பரவிவரும் துர்வசனக் கூட்டங்களை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ளாது போனால் ஆபத்து பயங்கரமாக இருக்கும். இக்கடைசி நாட்களில் சபை மக்கள் தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு விழிப்பாயிருப்பது திருச்சபைக்கு மிக நல்லது. 

துர்உபதேச இயக்கங்கள் மத அடிப்படை இயக்கங்கள். அதிலும் கிறிஸ்தவர்களோ சம்பந்தப்பட்டு வேதத்திற்கும் தேவ நியமங்களுக்கும் எதிராய்பேசும் இயக்கங்கள். வேதத்தை தவறாகக் கூறி கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைக் குழப்புவதால் விசுவாசிகள் இவற்றுக்கு விலக வேண்டியது அவசியமாகின்றது “வேறு சுவிசேஷத்தை“ சொல்லும் இவர்களின் தன்மைகள் எவைகள்? இந்தப் புகழ்வாய்ந்த போலி இயக்கங்களின் வெளிப்பாடுகள் எவைகள்? என்பதை விபரமாய் அறிந்து கொள்வது நலமாகும். 

வேறே சுவிசேஷம் (Different Gospel)
துர்வசனக் கூட்டத்தார் பொதுவாகவே அடிப்படை வசனத்திலிருந்து விலகி வேதத்தை பிரசங்கிப்பவர்கள். இவர்களின் செய்திகளில் “வேறே சுவிஷேசம் காணப்படுகின்றது. இதைப் பவுல் கலாத்தியருக்கு எழுதும்போது கூறியிருக்கிறார். 

“உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலா. 1: 6-8)

பவுல் கலாத்தியருக்கு எழுதின கடிதம் கி.பி. 55 இற்கும் 56 இற்கும் இடையேயுள்ள ஆண்டுகளில் எழுதப்பட்டது. அப்படியானால் முதல் நூற்றாண்டின் மையப்பகுதியிலேயே வேறொரு சுவிசேஷம் சபைக்குள் வந்துவிட்டது. அப்போஸ்தலரால் சொல்லப்பட்ட சுவிசேஷமேயன்றி வேறே சுவிசேஷம் இல்லை. அப்படி ஒரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து சொன்னாலும் அவன் சபிக்கப்பட்டவன் என்கிறார் பவுல். 

துர்உபதேசக்கூட்டம் மக்களைக் களங்கப்படுத்தி அவர்கள் மனதைக் கெடுத்தும் குழப்பியும் தங்கள் பக்கம் இழுக்கும்போது கிருபையை விட்டு விலகுகிறவர்கள் அந்தக் கூட்டங்களோடு சேர்ந்து விடுகின்றனர். எனவே பவுல் “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.“ (அப். 20;29-30) அவர்கள் சீஷரகளை இழுத்துக் கொள்ள மாறுபாடானவைகளை போதிப்பார்கள். என்ன போதிப்பார்கள் வேறே சுவிசேஷத்தைப் போதிப்பார்கள். 

சுவிசேஷம் என்பது எது? தேவகுமாரனான இயேசுக்கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, அவரது அற்புதமான ஊழியம், அவரது சிலுவை மரணம் அவரின் உண்மையான உயிர்தெழுதல், அவரின் இரண்டாம் வருகை அவரோடு பரலோகத்தில் நித்தியவாழ்வு இவைகள் அனைத்தும் அடங்கியதே சுவிசேஷம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த வேறே சுவிசேஷம் என்பது என்ன? சரியான சுவிசேஷத்தில் வரும் மூல உபதேசங்களை மாற்றி, திரி்த்து வேறுபடுத்தி இயேசுவோடு சம்பந்தப்படுத்திக் கூறுவதே வேறே சுவிசேஷம்.


இன்றும் உலகில் கன்னிப்பிறப்பை மறுதலிக்கும் கிறிஸ்தவர்களும் உயிர்தெழுதலை விசுவசியாத கல்விமான்களும் இருக்கிறார்கள்இவர்களெல்லாம் அந்த வேறே சுவிசேஷேத்திற்கு செவி சாய்ப்பவர்கள். கன்னிப்பிறப்பே சுவிசேஷேத்தின் வேர். இதையும் அடியோடு மறுதலிப்பவர்கள். வேறே சுவிசேஷக்  கூட்டத்தார். அவர்களின் துர்உபதேச இயக்கங்களும். இதை வெகுவாய் மறுதலிக்கின்றன.  

2. வேறே இயேசு (Different Jesus)
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய .இரண்டாம் கடிதத்தில் இவைகளைத் தெளிவாக்குகின்றார்.“எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப்  பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.“ (2 (கொரி. 11.4)

பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில், நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசு, நீங்கள் பெற்றிராத வேறே ஆவி, நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வெறொரு சுவிசேஷம் என்று எழுதியிருக்கிறார். வேறே இயேசு, வேறே ஆவி, வேறே சுவிசேஷம் ஆகிய இம்மூன்றும் துர்உபதேசக் கூட்டத்தினரால் போதிக்கப்படுபவை. 

வேறே இயேசு என்றால் வேதம் கூறும் இயேவை வேதத்தின்படி கூறாது வேறுவிதமாய் கூறுவதாகும். இயேசு வந்த நோக்கம் முழுவதையும் மாற்றி வேறுவிதமாய் போதிப்பதாகும். இயேசு செய்த ஊழியத்தை வேறு விதமாய் சித்தரிப்பதாகும். 

யெகோவா சாட்சி கூட்டத்தார் (Jehovah's Witnesses) இயேசு தேவனுடைய நித்திய குமாரனல்ல. அவர் தேவனுடைய முதல் சிருஷ்டி பிரதான தூதனான  மிகாவேலைப் போல் இயேசுவும் ஒருவர் என்கிறனர்
மோமர்மன் சபையார் (Mormon Church) இயேசுவை தெய்வீகமானவராக ஏற்றுக் கொள்வதில்லை. பல கடவுள்களி்ல் இருவரும் ஒருவர் வானலோகத் தகப்பனுக்கும் வானலோகத் தாய்க்கும் பாலுறவு முறையில் உற்பவித்துப் பிறந்த ஆவியின் முதல் குழந்தை (First Sprit Child) இயேசு லுசிபருக்கு ஆவியின் சகோதரன் (Sprit Brother of Lucifer) என்கிறனர். 

இப்படி இயேசுவை வேறுவிதங்களில் சித்தரித்து அவரை முழுவதும் மாறுபட்ட இயேசுவாக கூறுவது இவர்களின் கொள்கைகளாகும். பொதுவாக அனைத்து துர்உபதேசக் இயக்கங்களிலும் இவ்விதக் கொள்கைகள் இருக்கின்றன. அவை இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபட்டும் இருக்கின்றன. 

3. வேறே ஆவி. (Different Spirit)
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.“ என்று யோவான் தனது முதல் நிருபத்தில் மூல அறிவிப்பைக் கூறியிருக்கின்றார். ( 1 யோவான் 4:1-3)

இயேசுவை அறிக்கை பண்ணாத வேறே ஆவிகள் உலகத்தில் கிரியை செய்கின்றன. அவைகள் அந்திக் கிறிஸ்துவின் ஆவிகள் என்றே அழைக்கப்படுகின்றன. இவ்வித ஆவிகள் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகி்ன்றன. அந்திக்கிறிஸ்துவும் அந்த ஆவியையே பெற்று இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான். 

சபைக்கு இருக்கும் ஐந்து வகை ஊழியங்களும் தேவ ஆவியின் அழைப்பைப் பொறுத்தே அமைகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. கள்ளத் தீரக்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள மேய்ப்பர்கள், கள்ளப் போதகர்கள், கள்ள சுவிசேஷகர்கள் (வேறே சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்கள்) ஆகிய இவர்கள் அனைவரும் சபைக்கு எதிரான தவறான ஊழியர்கள் மட்டுமல்ல, தவறான ஆவியையுடைய பொய் ஊழியர்களும் கூட.

4. புதிய சத்தியம்  (New Truth)
அனைத்து கள்ள உபதேசக் இயக்கங்களும் தங்களுக்குப் புது வெளிப்பாட்டைக் கடவுள் கொடுத்தார் என்றே கூறுகின்றன. புது அந்த உபதேச செய்திகளை தேவனிடமிருந்தும் பிரசித்திப் பெற்ற தேவமனிதர்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர் என்றும் சொல்லுகின்றனர். ஆனால் அந்தச் செய்திகள் மிகவும் மாறுபாடானதாகவும் சந்தேகப் படக்கூடியதாகவும் சிந்தித்துப் பார்த்தால் நாம் கிரகிக்க் கூடாத அளவு விகற்பமானதாகவும் இருக்கின்றன. 

சன் மங் மூன் (Sun Myung Moon) என்பவர் மூனிஸ் (Moonies) எனும் இயக்கத்தின் ஸ்தாபகர் “கிறிஸ்துவும் கிறிஸ்துவின் கூட்டத்தைச் சாரந்தவர்களும் தங்களுடைய சேவைகளை முற்றும் முடிய செய்யாது பாதியிலே விட்டுச் சென்று விட்டார்கள். இயேசு விட்டுச் சென்ற சேவை செய்து முடிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூன் கூறினார். ஒற்றுமைப்படுத்தும் சபை (Unification Church) என்னும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடவுள் இதற்கு முன் வெளிப்படுத்தாத உண்மைகளையும், ஆழ்ந்த சத்தியங்களையும் போதகர் மூன் வெளிப்படுத்தினார் என்று கூறுகின்றனர். 

இயேசுவின் இருதயத்தையும் இயேசுவின் வேதனையும் இயேசுவின் நம்பிக்கையையும் எங்களால் மாத்திரமே அறிந்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். (Rev. Moon, The Way of the World, Holy Sprit) (Ass'n for the Unification of World Christianity Vol VIII, No 4, April 1976)

கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாய் கிறிஸ்தவம் எவ்விதத் தெளிவும் வெளிப்பாடுமின்றிக் கிடந்த்து.. ஆனால் கடவுள் ஜூனியர் ஜேசப் ஸ்மித்துக்கு (Joseph Smith Jr.) கொடுத்த “புதிய சத்தியத்தால்“ சுவிசேஷம் இதுவரை இழந்துபோனதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டது. இன்றோ ஐக்கியப்படுத்தும் சபைக்கு தேவனிடமிருந்து தொடர்ச்சியாக பதிய தெய்வீக வெளிப்பாட்டைக் கொடுக்கும் ஜீவனுள்ள தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு புதிய “சத்தியங்களை“ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று மோர்மன் சபையார் (Mormon Churcch) கூறுகிறார்கள். 

இவ்வித இயக்கங்கள் எல்லாம் வேத அடிப்படையும் ஒழுங்கும் கிரமுமின்றி, அவ்வப்போது புதிய சத்தியங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவர்களது சொந்தக் கருத்துக்களும் சுய வெளிப்பாடுகளும், வசன ஆதாரமற்று பிரசங்கிக்கப்படுகின்றன. கற்பனையான வெளிப்பாடுகளை வசனத்தோடு ஒப்பிட்டு தங்கள் இயக்கக் கொள்கைகளாக இவர்கள் வெளியிடுகிறார்கள்.

5. தவறான வியாக்கியானம் (Wrong Interpreation)
சில துர்உபதேச இயக்கங்கள் வேதத்திலிருந்து பல புதிய வியாக்கியானங்களைக் கொடுகின்றன. ஆவிக்குரிய வட்டாரத்தினர் ஒத்துக் கொள்ள முடியாத, தேவ மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வசனத்தை வியாக்கியானம் செய்கின்றனர். அவர்கள் சொல்லுவதே உறுதியானதும், .இறுதியானதுமாக  நினைத்து, சத்தியத்தின் கருத்துக்களை புறம்பே தள்ளுகின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகளும் ஆவிக்குரிய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சபைகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் மூல உபதேசங்களை இக்கூட்டத்தினர் தவறென காண்கிறார்கள். தேவ வசனத்தை மற்றவர்களெல்லாம் தவறாகப் படித்து புரிந்த கொண்டதையும் இவர்கள் மாத்திரமே சரியாய் படித்து போதிப்பதாயும் உரைக்கின்றனர். 

ஹெர்பட் ஆம்ஸ்ட்ராங் (Herbert W. Armstrong) என்பவர் “இன்றைய பிரபலமான முக்கிய சபைகள் போதிப்பதும் செயல்படுவதும் எதுவுமே வேதஅடிப்படையானதல்ல. இவர்கள் எதையோ படித்து சபைகளையோ போதனை செய்து கொண்டிருக்கிறார்கள்“. என்று கூறுகிறார். *The Auto Biography of Herbert W. Armstrong. Pasadena, Ambassador College Press 1967, 0.264, 298) சாதாரணமாக வேத அடிப்படைக் கருத்துக்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதால் இவர்கள் துர்உபதேசக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று அறிந்த கொள்ள முடியும். குறிப்பாக சில இறையியல் கல்லூரிப் பாடங்களும் இதற்கு உதவி செய்கின்றன. இவ்விதக் கள்ள ஊழியர்கள் தேவ விசுவாசத்தைக் கெடுக்க  முயற்சி செய்யும் ஊழியத்தைச் செய்து வருகின்றனர். 

6. திருச்சபைகளைப் புறக்கணித்தல்
துர்உபதேச இயக்கங்கள் சமநிலையுள்ள பாரம்பரிய திருச்சபைகளையும் ஆவிக்குரிய திருச்சபைகளையும் அறவே வெறுக்கின்றன. நமது ஆலய ஆராதனை ஒழுங்கு முறைகளையும் குற்றஞ்சாட்டுகின்றன. மறுபிறப்பு. ஞானஸ்நானம் ஆவியின் நிறைவு, தொழுகை, வரங்கள் இவைகள் முக்கியமற்றவை எனக்கூறி அப்புறப்படுதுகின்றனர். பாரம்பரிய திருச்சபைகளையும் அவர்களது கூட்டத்தினர் வெறுக்கின்றனர். 

ஆவிக்குரிய திருச்சபைகள் அனைத்தும் தேவ திட்டத்தோடும் அங்கீகாரத்தோடும் நடக்கின்றன. எந்தத் திருச்சபையும் ஆவியானவரின் அங்கீகாரம், தேவமக்களின் அனுமதி ஆகிய இரண்டையும் பெறும்போது சரியான சபைக்குரிய இடத்தைப் பெறுகின்றது. 

துர்உபதேசக் கூட்டத்தினர் இப்படிப்பட்ட எந்த சபையையும் ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் சொல்லும் புதுமையான மாறுபாடான உபதேசத்திற்கு நமது சபைகள் இசைவதில்லை. அவர்களின் கருத்துக்களைப் பறம்பே தள்ளி சபை மக்களைப் பாதுகாப்பதால் சரியான சபைகள் மீது இக்கூட்டத்தினர் கோபமும் பொறாமையும் கொள்கின்றனர். 

தேவனை  ஆராதித்து தொழுகை நடத்துதலை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் இவர்கள் நடத்தும் தொழுகை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. தொழுகையில் நல்ல பாடல்களையோ தேவனை மகிழ்விக்கும் கீதங்களையோ சேர்ப்பதில்லை. ஆராதனையில் இவர்களுக்கு வேத செய்தியைக் கொடுக்கும் நபர் நல்ல பரிசுத்தவனாக இருக்கமாட்டார். சிலரது ஆராதனையில் அப்பம் பிட்கும் கர்த்தருடைய பந்தி என்பது கிடையாது, ஆவியின் நிறைவு, அந்நிய பாஷை பேசுதல, ஆவிக்குரிய வரங்களின் கிரியைகள் ஆகியவற்றை துர்உபதேசக் கூட்டத்தினர் ஒருபோதும் மதிப்பதில்லை. 

எனவே இப்படிப்பட்ட நியமங்களைக் கடைப்பிடிக்கும் சபைகளைப் பார்த்து இவர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சபைகளுக்கு விரோதமாய் செயல்படுகிறார்கள். சபையின் ஆட்களை வஞ்சித்து தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளகிறார்கள். எதைச் செய்தாலும் திரித்துவ சபைகளுக்கு எதிராகவே செய்கின்றார்கள். அதே நேரத்தில் இவர்களின் ஆராதனைகள் பெரும்பாலும் அந்தரங்கமான இடங்களிலேயே நடத்தப்படுகின்றன. அங்கத்தினரைத் தவிர மற்றவர்களை அத்தனை எளிதில் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை. 

7. இரட்டைப் பேச்சு
சில துர்உபதேசக் கூட்ங்களில் இரட்டைப் பேச்சுக் நிறைந்திருக்கின்றன. அவர்கள் நம்மோடு பேசுவது ஒன்று. ஆனால் மனதில் வைத்துக் கொண்டிருக்கும் கருத்து வேறொன்று. இரட்டைச் செய்திகளும் இரட்டைக்  கருத்துக்களும் ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றன. உண்மையான சத்தியத்தில், ஆழ்ந்த சரியான நம்பிக்கையுள்ளவர்கள் போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் விசுவாத்தின் எவ்வித அடிப்படை அம்சமும் உள்ளத்தில் இருப்பதில்லை. 

தங்களை நல்ல கிறிஸ்தவர்களாய்க் காட்டிக் கொண்டு மக்களுக்கு முன்விசுவாசிகள் போல் நடிக்கிறார்கள். மக்கள் அவர்களோடு நெருங்கிப் பழகிய பின்னர்தான் அவர்கள் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்துக்களையும் தவறான விசுவாச நம்பிக்கைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது. 

மோர்மன் சபையினர் இதற்கு ஒரு உதாரணம்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசுகிறிஸ்துசபை (The Church if Jesus Christ of Latter-day Saints) தனது செய்தி ஒன்றில் “அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை நாங்கள் விசவாசிக்கிறோம்“ என்று எழுதியிருந்தார்கள். இந்த அறிக்கையைப் படிக்கம் மக்கள். இது கிறிஸ்தவ மக்கள் பங்கேற்கு்ம் திருச்சபைகளில் ஒன்று என நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மையென்னவென்றால் அவர்கள் சொல்லும் செய்திகளின் மறுபக்கம் விசவாசத் துரோகம் அடங்கியிருக்கிறது. 

இவ்வித இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களையும் கிறிஸ்தவர்கள் என அழைத்துகு் கொள்ளத் தயங்குவதில்லை. கிறிஸ்தவர்கள் போல் பேசிப் பழகி கடைசியில் தாங்கள் சார்ந்து வாழும் உத்தேச இயக்கங்களோடு மற்றவர்களையு் இணைத்து விடுகிறார்கள். 

8. தேவ தன்மைகளை மறுத்தல்
பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னம மூன்று பேரும் ஒருவரே.இவர்கள் தனித்தனி காலக்கட்டங்களில் செயல்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டுக் காலம் பிதாவின் காலம். புதிய ஏற்பாட்டுக் காலம் இயேசு கிறிஸ்துவின் காலம். நாம் வாழ்நது கொண்டிருக்கு இந்தக் காலமோ ஆவியானவரின் காலம். ஆனால் இம்மூவரும் ஒருவரே என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல இவ்வியக்கத்தார் நம்புவதில்லை தேவனது இந்த திரித்துவ தெய்வத் தன்மைகளை அடியோடு மறுக்கின்றனர். யெகோவா சாட்சிகள் தேவனுடைய வார்த்தையில் திரித்துவத்திற்கான எவ்வித ஆதாரங்களுமில்லை என்கின்றனர். (Charles Russell, Studies in the Scriptures, V, Brooklyn, Indernational Bible Students 1912, p54)

கிறிஸ்தவம் தோன்றின காலத்தில் கடவுள் மூன்று விதங்களில் செயல்படுகிறார் என்ற கருத்து இருந்த்து. ஆனால் இதே கருத்து கிறிஸ்தவம் தோன்றிய நாட்களில் இருந்த பழம்  பெரும் மதங்களிலும் இருந்த. அந்த மதங்கள் கடவுள் மூன்று தன்மைகளிலிருந்தும் அதற்கு மேலும் செயல்படுகிறார் என்ற கூறின. பாவிலோனியர் இவ்வித மூன்றில் ஒன்று (Three in one) எனும் தன்மையைக் கொண்ட கடவுளை வழிபட்டனர். அந்நாட்களில் தான் இக்கொள்கை நவீன விசுவாசிகளின் சின்னமாகிவிட்டது.“ என்று உலகளாவிய வழி (The Way international) எனும் கூட்டத்தார். திரித்துவத்தைக் குறித்து கூறுகின்றனர். Jesus Christ is not God, Wierwile, New Knowville, Ohio)

ஐ ஏம் எ கிறிஸ்டியன்....


நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பேனா? சிந்திப்போம்.